இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 நவம்பர், 2017

முதல் முத்தம்

பெற்றுக்கொண்ட முதல் பரிசு
இன்னும் கன்னக் குழியில்
கிடக்குதடி

நினைவுகள் தட்டும்போது
கை தடவி பார்குதடி

பார்பதற்காய்
அடிக்கடி கண்கள்
கிழக்கு மேற்காய் புரளுதடி

வியாழன், 9 நவம்பர், 2017

கடன்காரி

அடியே கடன்காரி
எனக்கு கிடைக்கவேண்டிய
அவள்
பட்டுத் தெறிக்கும்
எச்சில் துளியையும்
இதழ் பதிப்பையும்
நீ வேண்டுகிறாயே

வெள்ளி, 3 நவம்பர், 2017

கார்மேகம்

போர் மேகம் சூழ்ந்தபோதே
பீரங்கி மழையில்
நனைந்தோம்  
இதுவென்ன கார்மேகம்
பேயத் தான் முடியும்      
மழை

புதன், 1 நவம்பர், 2017

அரசியல் கைதிகள்

புரட்சிகள் போராட்டங்கள் எங்கு நிகழ்கிறதோ அங்கு உருவானவர்கலே அரசியற் கைதிகள்.  அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோரென கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டோரே அரசியற் கைதிகள் என வரைமுறையிருப்பினும் உலகில் இவர்களுக்கான சரியான வரைமுறையினை இன்னும் தேடவேண்டியே உள்ளது.

உலகளவில் மியன்மாரின் ஆங்சாங்சூகி   பேசப்பட்ட ஒரு அரசியல் கைதி இவர் 1990-2010 வரையில் மியன்மார் இரானுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

ஆங்சாங்சூகி
ஆங்சாங்சூகி

                                       https://en.wikipedia.org/wiki/Aung_San_Suu_Kyi


பாகிஸ்தான் முன்னாள் ஐனாதிபதி பெனாசிர்பூட்டோ முகமட்சியா உல்கக் எனும் இரானுவ ஆட்சியாளரால்  கைது செய்யப்பட்டு 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெனாசிர்பூட்டோ
https://en.wikipedia.org/wiki/Benazir_Bhutto 



மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா ஆகியோர் பிரித்தானியர் ஆட்சி காலத்தில் அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

நெல்சன் மண்டேலா 1963- 1990 வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறேசிலின் முன்னாள் ஐனாதிபதி டில்மா றொசெவ் 1970-1973 வரை அந் நாட்டு இரானுவ ஆட்சியாளரால் சிறையில் அடைக்கப்பட்டார்.

எம்மா கோல்ட்மான் ஜோன் மைக்லேன்,பேர்ரென்ட் றசெல் போன்றோர் 1ம் உலக போரில் கைது செய்யப்பட்டனர். https://en.wikipedia.org/wiki/World_War_I

லியோ எக்ஸியாபாபோ 1980 இல் ஐனானாயக ஆட்சிக்காக போராடியமையினால் சின அரசாங்கத்தினரால் கைது செய்யப்பட்டார். https://en.wikipedia.org/wiki/China

சோவியத்யூனியன் அமெரிக்கா (ஆபிரிக்கா அமெரிக்கர்கள்) , ஜேர்மன் நாசி போன்றோர் அரசியற் கைதிகளாக அடைக்கப்பட்டனர்.

1700- 1800 களில் பிரிட்டிஸிலிருந்து 1000 கைதிகள் அவுஸ்ரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.



இலங்கையில் யுத்த காலத்தில் ஏராளமான தமிழர்கள் அரசியல் கைதிகளாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் அநேகமானோர்  தென்னிலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றளவிலும் இவர்களின் விடுதலைக்காக  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. http://srilankabrief.org/tag/political-prisoners/

?