இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 அக்டோபர், 2017

அடிமை

வரலாற்றை பீத்திக்கொண்டே
விணாய்போணோம்
பழமை பேசி புதைந்தேபோனோம்
அண்டி புழங்கி அடிமையானோம்
நம்பி புழங்கி  அநாதையானோம்
அனைத்தும் முடிந்து இன்று
அடக்கமானோம்
என்று உடையும் இந்த
அடிமை விலங்கு

புதன், 25 அக்டோபர், 2017

அரசியல் கைதிகள்

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக நாட்டின் முக்கிய பேசு பொருள் அரசியற் கைதிகளின் விடுதலை கடந்த 4 வாரங்களிற்கு மேலாக தமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ் அரசியற் கைதிகள் இவர்களுக்கு ஆதரவாக வடக்கு மற்றும் கொழும்பில் பொது அமைப்பினர் பொது மக்கள் மாணவர்கள் வணிகர் சங்கம் போன்றோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் ஒரு அங்கமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற தமிழ்த் தின நிகழ்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புறக்கணித்திருந்தனர்.
கூட்டமைப்பின் இன்னொரு கிளையினரான தமிழ் மக்கள் பேரவை பிரதி நிதிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் முன்னாள் பாராளுமண்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமசந்திரன் ஜனாதிபதி எமது கோரிக்கைகளை நிறைவேற்றாது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரமுடியாதென அறிக்கை வெளியிட்டார்.


ஆனால் இவர்களின் ஆர்பாட்டங்கள் அறிவிப்புக்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இயல்பாக தமிழ்தின விழாவில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் வருகை தந்தார். தனக்கு எதிராக ஆர்பாட்டம் நடாத்திய ஆர்ப்பாட்ட காரர்களிடம் சென்று உங்கள் பிரச்சினைகளை சொல்லுங்கள் பேசி தீர்கலாம் என அவர்களை ஆறுதல்படுத்திவிட்டு விரைந்தார்.

இது ஒரு புறம் இருக்க யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கடந்த 19ம் திகதி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் ஜனாதிபதியினைசந்தித்திருந்தனர்.
இந்த சந்திப்பு முழுமையாக வெற்றியளிக்காததைத் தொடர்ந்து 20ம் திகதி  தொடக்கம்  வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றாவிட்டாள் தமது போராட்டத்தினை மேலும் வலுப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வோமென யாழ் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதேவேளை கடந்த 17ம் திகதி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றினையும் நடாத்தியிருந்தனர்.
இதன் பின்னர் ஜனாதிபதியினை சந்திக்கும் வாய்ப்பும்வழங்கப்பட்டது.


இதேவேளை கடந்த 19ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் உட்பட உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உறவினரும் ஜனாதிபதியினை சந்தித்தனர். இந்த சந்திப்பிலும் ஆக்கபூர்வமான பதில்கள்  ஏதும் கிடைக்கவில்லை.

கடந்த 18ம் திகதி பாராளுமண்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரனையின் போது பேசிய எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் அரசு கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக் கொண்டார்.

வவுனியாவில் இடம்பெற்ற வழக்கு விசாரனைகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமையினாள் கைதிகளின் அடிப்படை உரிமையான அறிந்து கொள்ளும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இவ்வாறாக தொடர்சியான போராட்டங்கள்,கண்டனங்கள், விவாதங்கள்,ஆர்பாட்டங்கள் நடாத்தப்பட்டும் எமது நியாயமான கோரிக்கைகளுக்கான பதில்கள் கிடைக்காதவிடத்து நாம் எமது போராட்டத்தினை இன்னும் வலுப்படுத்தி வெல்லப் போகின்றோமா? இல்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டுமென சோர்வடைய போகிறோமா ? இந்த கேள்விகளுக்கான பதில்கள் அடுத்து வரும் நாட்களில் கிடைக்கட்டும்.


திங்கள், 23 அக்டோபர், 2017

I”d retire if get close to kumbles” record அஸ்வின் சொன்னது என்ன?



இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு வித்திட்ட வீரர்களில் ஒருவர் அஸ்வின் குறிப்பாக இந்தியாவிற்கு வெளியே சுழற் பந்து வீச்சில் கலக்கும் வீரர்களில் அஸ்வினின் இடம் குறிப்பிடத்தக்கது.


நடந்து முடிந்த அவுஸ்ரேலிய தொடர் மற்றும் இலங்கை தொடர்களிலும்; ஓரம் கட்டப்பட்டவர் தற்போது நியூசிலாந்துக்கெதிரான தொடரிலும் ஓரம் கட்டப்பட்டுள்ளார் கங்குலி தலமைப் பொறுப்பிலிருந்த போது கர்பயன்சிங் யுவ்ராஜ் ஆகியோர் அவரின் செல்லப் பிள்ளைகளாக இருந்தனர்.
                   

 டோனி தலைமைப் பொறுப்பபிலிருந்த போது அஸ்வின் ஜடேஜா ஆகியோர் டோனியின் செல்லங்களாக இருந்தனர். அந்த சமயத்தில் டோனி விரும்பினாலும் கர்பயன் சிங்கை தேர்வாரள்கள் ஒதுக்கியிருந்தனர்.

அதே  போன்றதொரு நிலமை தற்போது அஸ்வினை வழைத்துவிட்டது. நேற்றைய தினம் அஸ்வின் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் நான் கும்ளேயின் சாதனையை முறியடிக்க விரும்பவில்லை” என்பதே ஒரு வீரனின் உச்சக்கட்ட விரக்தியே இந்த வார்தை


இந்திய அணியின் தலமைப் பயிற்சியாளர்களில் ஒருவராக கும்ளே பதவி வகிக்கின்றார். இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்களில் முதலிடம் இவருக்கே சர்வதேச டெஸ்ட் கிர்க்கெட்டில் அதிக இலக்குகளை வீழ்தியவர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.1ம் 2ம் இடங்களை முறையே முரளிதரன் வோர்ன் ஆகியோர் பகிர்கின்றனர்.


கும்ளே இது வரை 618 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.
அஸ்வின் 52 போட்டிகளில் 292 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். சாராசரியாக ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.

முரளிதரன் 133 போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார். சராசரி ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.


வோர்ன் 145 போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழத்;தியுள்ளார். சராசரி ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கும்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் சராசரியாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


கர்பயன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டினை வீழத்தியுள்ளார். கர்பயன் சிங் சராசரியாக ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கும்ளேயின் சாதனைகளை தகர்க கூடியவராக கர்பயன் இருந்தாலும் அவர் போடடிகளில் விளையாடுவதே கேள்வி? கர்பயனுக்கு தற்போது 37 வயதாகிவிட்டது. இவருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை கர்பயன் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை


தற்போது கும்ளேக்கு அச்சுறுத்தலாக உள்ள வீரர் அஸ்வின்(31) இவரை போட்டிகளில் இடம்பெறாமல் செய்வதன் மூலம் கும்ளேயின் சாதனையை முறியடிக்க முடியாது.


இதே வேகத்துடன் அஸ்வின் இருந்தாள் 100வது போட்டியில் கூட 600 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புண்டு.
2011 ம் ஆண்டில் இலங்கைக்கெதிராக முதல் போட்டியை விளையாடிய அஸ்வின் 6 ஆண்டுகளில் 292 விக்கெட்டினை வீழ்தியுள்ளார்.
தற்போது 31 வயதாகின்ற அஸ்வின் இன்னும் 5 வருடங்கள் ஆடினால் 100 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்புண்டு

ஏனைய நாட்டு வீரர்களிடம் ஒப்பிடும்போது அவுஸ்ரேலியா இந்திய அணிகள் அதிகளவான போட்டிகளில் விளையாடுவதனால் அஸ்வினுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சாதனை படைக்க வாய்ப்புண்டு.


அஸ்வின் இன்னும் 2 போட்டிகளில் விளையாடினாள்300 விக்கெட்டுகளை வீழ்திய 3 வது இந்தியராக ஜொலிப்பார். இவற்றை கணக்கு வைத்தே அஸ்வினை ஓரம் கட்டுவதை அறிந்த  அஸ்வின் இவ்வாறான அறிவிப்பைI”d retire if get close to kumbles” record
வெளியிட்டுள்ளார்.

புதன், 18 அக்டோபர், 2017

மெர்சல் தீபாவளி விருந்து

தனது தாய் தந்தையை(நித்தியாமேனன் விஜய்) கொண்ற எஸ்ஜே சூர்யாவை பழிவாங்குகிறார் விஜய் இது தான் கதை

இதற்குள் எப்படி ஸ்கோர் பண்ண முடியுமோ அதை செவ்வனே செய்திருக்கிறார் அட்லி.
தலைவா பைரவா போன்று விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போடுகின்ற கதையே மெர்சல்.

அன்மைக்கால நாட்டு நடப்புக்களை எவ்வளவுக்கு புட்டு வைக்கிறார் அட்லி. ஜி.எஸ்.ரி மற்றும் மருத்துவம் சார்ந்த பிரச்சினைகளையும் மும்பை வைத்தியசாலையில் காஸ் சிலின்டர் விநியோக பிரச்சினையால் குழந்தைகள் இறந்ததென நாட்டுநடப்பை படம் முழுக்க இறைத்திருக்கிறார்.

விஜய்யும் அட்லியும் படம் வெளியிடுவதில் சிக்கலை எதிர்நோக்குவோம் என்பதை கட்டாயம்  அறிந்திருப்பார்கள்.

சீமான் ஒரு பேட்டியின் போது ஆளப்போறான் தமிழன் தனக்கான பாடல் என்றார் இதை நிரூபிப்பதை போலவே  விஜய் பேசுகின்ற அரசியல் வசனங்களும் சீமானுக்கானதோ என எண்ண வைக்கிறது. நிச்சயமாக ஒரு துனிச்சலான நாயகனும் இயக்குனரும்

கதைசொல்லும் வித்தையை சங்கரிடத்தில் நன்றாக கற்றுள்ளார் அட்லி. எந்த இடத்திலும் முகம் சுழிக்கின்ற காட்சிகள் இல்லை. போக போக அடுத்து என்ன நடக்கப்போகின்றதென்ற எதிர்பார்பிற்கு பங்சமே இல்லை. ரசிகர்கள் இது தான் நடக்குமென ஊகித்து கொள்ளமுடியாமல் கதையினை தனது சட்டைப் பைக்குள் வைத்துள்ளார் அட்லி.

அவர் அழைத்துச்செல்லும்போது மட்டுமே கதையோடு நம்மால் பயனிக்கமுடிகிறது.

படத்தில் வருகின்ற வசனங்கள் அடுத்து வரும் நாட்களில் சமூக வலைத்தளங்களுக்கும் மீடியாக்களுக்கும் நல்ல தீன்கள்

 முழுக்க விஜய்யை(3) சுற்றியே கதை செல்கிறது.
தற்போது நமக்குள்ள பொறுப்பையும் சொல்லத் தவறவில்லை


sjசூர்யா டாக்டர் அழகான வில்லனாக கலக்கியிருக்கிறார்.
 தமிழ் சினிமாவில் ரகுவரன் பிரகாஸ்ராஜ்ஜிற்கு பிறகு எங்கள் தலைமுறை வில்லன்

சத்யன் மற்றும் சத்தியராஜ்ஜிற்கு பெரியளவில் இடமில்லாவிட்டாலும் தமது எல்லைக்குள் நல்ல ஸ்கோர் செய்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ததைப்போல வடிவேலுவின் காமெடிக்கு இடமில்லை விஜய்யுடன் இவர் பயனிக்கிறார்.  விஜய்யின் 5ரூபா டாக்டர் பெயரும் சில இடங்களில் சிரிப்பு வரக் காரனம்

கஜால் அகர்வால் மற்றும் சமந்தாவிற்கு பெரிய இடமில்லை கவர்சி பொம்மைகளாகவும் காட்டவில்லை நித்தியமேனனுக்கு கிடைத்த வாய்ப்பை நண்றாக பயன்படுத்தியுள்ளார்.

துனை நடிகர்களான சரளா, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் என ஒரு திரை பட்டாளமே கலக்கியுள்ளது.

வழமை போலவே விஜய்யின் சண்டை க் காட்சிகளும் நடனமும் அரங்கை அதிர வைக்கிறது.

ராஹ்மானின் பாடல்கள் திரைக்குவெளியில் வரும்போதும் முனுமுனுக்கவைக்கிறது.  மாஸ் காட்சிகள் வரும்போது வருகின்ற இசை இன்னும் கூடுதல் பலமாகவுள்ளது.

எடிட்டர் எந்த காட்சியையும் தூக்கியிருக்கமாட்டார் படம் 3 மணித்தியாலங்கள் வரை செல்கிறது.
காட்சி பொருத்தங்கள் கன கச்சிதமாகவுள்ளது.

தேனான்டாள் பிலிம்ஸினருக்கும் ஏறுமுகமே

மொத்தத்தில் மெர்சல் ஒரு நல்ல படைப்பு
         

வெள்ளி, 13 அக்டோபர், 2017

காதல்

என்ன இந்த காதல்
கரையோர யோடிகளின்
தழுவல் தானோ

வலைகளின் அரட்டைகளோ
பள்ளி கவர்சியில் வந்ததுவோ

நடு வயது பாவையில்
கண்ட மயக்கமோ

பாடம் சொன்ன ஆசனிடம்
புளர்ந்த கிளர்சியோ
தெரியவில்லை

காதல் எனும் பாடம் சொல்லும்
கவி பேரரசே சொல்லிவிடு


  

காடு

பச்சை வனத்தின்
பிசிறல்கள் என் மாளிகையில்
சிதறிக்கிடக்கின்றன

விண்னைத் தொடுகின்ற
மின்கம்ப மரங்கள்
என் மாளிகையில்
பச்சை விளக்காய் எரிகின்றன

மார்கழியின் காட்டாறு                                                      
                                 
இங்கே ஒரு ஓரம்
ஆறாய் பாய்கிறதே

மிதந்து பார்கும்
விழியின் எதிரே
தெரிகின்ற ஒளிக்கீற்றின் வண்ணங்கள்
வண்ணம் தீட்டாது
நான் பார்த எண்ணங்கள்

தெரிகின்ற இந்த
வண்ண வனத்தில்
எனை இழுத்து வந்த
என் கனவு தேவதையே
இன்னொருமுறை தூங்கி எழ
என் கயிற்று கட்டிலை விரிக்கிறேன்


வியாழன், 12 அக்டோபர், 2017

சூடாய் ஏதும் வேண்டாம்


என்னவள் உள்ளே
ஒளிந்துள்ளால்

வெறும் நீர்
குடித்தாலே ஓடித்திரிகிறாள்

சுடு நீர் போனால்
கட்டாயம் அழிந்திடுவாள்

கண்மணியை கண்ணின்
கருமணியில் வைப்பேன்
காலமெல்லாம்
காதல் கதை பேச

புதன், 11 அக்டோபர், 2017

போர்வை

ஒன்று தான்
தூக்கம் இரண்டு

கழுத்தோரம் செய்தி
ஒன்று நான் சொல்ல
விசேட செய்திகளுக்காய்
நீ காத்திருக்க

கால்கள்
பினைந்து கொள்ளும்
விரல்கள் பின்னிக் கொள்ளும்

உதடு தீவிரமாய்
பரிமாறும்
நெஞ்சம் ஏதோ
ஏங்கும்

கடிகாரம் விரைவாய்
சுற்றிவிடும்
நம் கதை பேச

திங்கள், 9 அக்டோபர், 2017

கடிதம்

வடிக்க எடுத்த எழுதி
உடைந்ததடி
மழைத்துளியாள்
கடதாசி கரைந்ததடி

காரிருட்டின் கனத்தாள்
விளக்கணைந்ததடி

இனி என்ன செய்வேன்
இடது மார்பில்
கிளித்த கோட்டில்
சுரக்கின்ற உன் நினைவுகளை
காகிதமாய்
வடித்து விட்டேன்

செந் நிறத்தின்
ஆழம் புரிந்தாள்
சொல்லிவிடு தயக்கமின்றி
செந்தாமரையே

?