இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 அக்டோபர், 2017

காடு

பச்சை வனத்தின்
பிசிறல்கள் என் மாளிகையில்
சிதறிக்கிடக்கின்றன

விண்னைத் தொடுகின்ற
மின்கம்ப மரங்கள்
என் மாளிகையில்
பச்சை விளக்காய் எரிகின்றன

மார்கழியின் காட்டாறு                                                      
                                 
இங்கே ஒரு ஓரம்
ஆறாய் பாய்கிறதே

மிதந்து பார்கும்
விழியின் எதிரே
தெரிகின்ற ஒளிக்கீற்றின் வண்ணங்கள்
வண்ணம் தீட்டாது
நான் பார்த எண்ணங்கள்

தெரிகின்ற இந்த
வண்ண வனத்தில்
எனை இழுத்து வந்த
என் கனவு தேவதையே
இன்னொருமுறை தூங்கி எழ
என் கயிற்று கட்டிலை விரிக்கிறேன்


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பிசிறல்கள் என் மாளிகையில்

?